நானுமோர் புள்ளி

மழை
பொழிந்தும்
கரையாதிருக்கின்றன
காடுமலைகள்

மண்
புதைத்தும்
மரணிக்காதிருக்கின்றன
மரவிதைகள்

இலை
காய்ந்தும்
இறவாதிருக்கின்றன
கொடிவேர்கள்

உடல்
குளிர்ந்தும்
உறங்காதிருக்கின்றன
கனற்கங்குகள்

புயல்
ஒடித்தும்
உதிராதிருக்கின்றன
ஓரிருப்பூக்கள்

நீ
நீங்கியும்
நீங்காதிருக்கின்றன
முதுநினைவுகள்

இவை
யாவுமே இயற்கை;
இதில்
யானுமே சிறுபுள்ளி.