மறுகணம்
இறப்பதில்
வலியும்
இல்லை
மாயாது
கிடப்பதில்
பயனும்
இல்லை
தீ
திண்பதில்
வருத்தமும்
இல்லை
தீ
திண்டாது
வாழ்க்கையும்
இல்லை
தீக்குச்சிகளாய்
பிறந்து
விட்டோம்
தீப்பெட்டியினுள்ளேயே
கிடந்தென்ன
பயன்?!
தீத்தந்து
– அதே
தீயில்
வெந்து
மண்ணோடு
மரணித்து
மண்ணாவதில்
பயமுமில்லை
மாறாக,
தீபமாகிறேனா?
தீயவனாகிறேனா?
அதுவே
பயம்.