காதைத்
திருகிப் பார்த்தேன்
காலில்
விழுந்துப் பார்த்தேன்
எதற்கும்
வாயைத் திறக்கவில்லை
இருந்தும்
நான் விடுவதாயில்லை.
சதியில்
நாடகமாடியும் பார்த்தேன்
சுதியில்
நாட்டியமாடியும் பார்த்தேன்
இதற்கும்
மனம் திறக்கவில்லை
இப்போதும்
நான் விடுவதாயில்லை.
கதிரவனை
காவலுக்கு அழைத்தேன்
கம்பனை
நடுமைக்கு அழைத்தேன்
நீதிக்கும்
நெஞ்சம் திறக்கவில்லை
இனியும்
நான் போரிடுவதாயில்லை.
ஏக்கத்தில்
சோர்ந்துப் போனேன்
ஏமாற்றத்தில்
இடிந்துப் போனேன்.
ஆறுதலுக்கு
வாயைத் திறந்தது
செவிகளில்
ஏதோ சொன்னது.
"எழுதப்படும்
மௌனத்தை விட
கலைக்கப்படாத
மௌனமே அழகு."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக