கண்மணி: பிழைத்த கதை

செத்ததிலிருந்து
மீண்ட கதை சொல்கிறேன்;
செவியைச் சற்றே சீராக்குங்கள்

மரித்த
மூன்றாம் நாளில் இயேசுவின்
கிருபையால் உயிர்த் தெழுந்தேன்

சிரிக்காதீர்..
சிலுவைகள் சுமக்க நேரிடும்;
இந்தியா மதச்சார்பற்ற நாடு

வம்பை வளர்த்து
வலுக்கட்டாயமாய் அன்பைப் பிரித்து
சாதிச் சாக்கடையில் தள்ளினர்

அதோ இருக்கிறானே
அவன்தான் மாப்பிள்ளையாம்;
அடையாளம் தெரியாத வொருவனிடம்
சாதிக்கு விலைப்பேசி விற்றனர்

அதற்குப் பெயர் திருமணமென்று
அவர்களே சொல்லிக் கொண்டனர்

உயிரற்ற உடலுக்கு
கல்யாணம் நடந்தாலென்ன?
கருமாதி நடந்தாலென்ன?
கண்டுக்கொள்ளவில்லை நான்

புறங்கூறும்
மாந்தரை புறந்தள்ளி
போகாதூரம்
போய்ச் சேர்ந்து
கனவிலும்
காணாதேசம் கண்டடைந்தேன்;
கண்கள்
புண்ணாக கலங்கினேன் நான்

கூடவே
ஒருவன் வந்தான்;
அவன்தான்
இனியெனக்கு கணவனாம்

அன்பிடமிருந்த அழகில்
அரைப்புள்ளிக்கூட அவனிடமில்லை
கருமை வேந்தனின்
கருமயிரளவுக்குக்கூட சமமில்லை

அங்கும் தனிமை
அத்துணையும் அறியா முகம்
அகரம் படிக்காத அறிவிலிகள்

எங்கும் இருள்
எந்நேரமும் துணையாக
என்னுள்ளிருக்கும் அன்பன் நினைவு

“காட்டை வித்து
கள்ளுக் குடிச்சாலும்
ஆண்ட பரம்பரையாம்“ அவன்

கட்டிய
சில தினங்களிலேயே
காடு சேர்ந்தவனை தீயுண்டது

அணில்
தீண்டாக் கனியாக
அகம் மகிழ்ந்தேன் நான்

அப்புறமெப்படி
கையில் குழந்தை
அதுதானே உங்கள் கேள்வி?

குழந்தைப் பெற
கட்டியவன் வேண்டுமாயென்ன?
கட்டியணைப்பவன் போதாதா?



தொடர்ச்சி:



முந்தைய பதிவுகள்: